பெற்றோர் கண்முன்னே மாடியில் இருந்து குதித்த மாணவி !

0 minute read
0
திருச்சியில் ஆசிரியைகள் திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி, 2-வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
மாடியில் இருந்து குதித்த மாணவி


2 -வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயம் அடைந்த அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தபோது, தந்தை முன்னிலை யில் ஆசிரியர்கள் அந்த மாணவியை திட்டியதாக தெரிகிறது. இதனை யடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் திட்டிய ஆசிரியரும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 11, April 2025
Privacy and cookie settings