3 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்த பேராசிரியை கல்லூரி அறைக்குள் தற்கொலை !

1 minute read
0
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா தன்னாட்சி கல்லூரியில், முன்னாள் பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கல்லூரி பேராசிரியை அறைக்குள் தற்கொலை


சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது டிஜி வைஷ்ணவா தன்னாட்சி கல்லூரி. இங்கு மூன்று ஆண்டு களுக்கு முன்பு பணியாற்றியவர் ஹரிஷாந்தி. 

தெலுங்கு துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், மூன்றாண்டு களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் பணியி லிருந்து விலகி தற்போது ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு வந்துள்ளார் ஹரிசாந்தி. என்ன வேலையாக வந்தார்? யாரைப் பார்க்க வந்தார்? 

என்ன நடந்தது என்பதெல்லாம் இன்னும் தெரியவராத நிலையில் ஹரிஷாந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்பது மட்டும் வெளி வந்திருக்கிறது.


இதற்கிடையில், கல்லூரி மாணவர் களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

இறந்த பேராசிரியரின் உடலை காவல் துறையினர் மீட்டு , உடற்கூறாய் வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு மேலதிக விவரங்கள் தெரிய வரும்.

கல்லூரியின் முன்னாள் பேராசிரியை திடீரென்று கல்லூரிக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, November 2025
Privacy and cookie settings