சுவர் இடிந்த வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஜாமின் !

1 minute read
0
மேட்டுப் பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணி யத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சுவர் இடிந்த வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்


கோவை மேட்டுப் பாளையத்தில் கடந்த 2 ஆம் தேதியன்று 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். 

சிவசுப்ரமணியனின் ஜாமின் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மேட்டுப் பாளையத்தில் பெய்த கனமழை யின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்ததா கவும், 


எந்த உள் நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்பட வில்லை என்பதால், தனக்கு ஜாமின் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவ தாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, சிவசுப்ரமணி யனுக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.

மேலும், 1 லட்சம் ரூபாய் பிணைத் தொகை கொண்ட இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டு மெனவும், 

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது ஜாமின் வழங்கினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 23, March 2025
Privacy and cookie settings