ஞாபக மறதியை போக்கும் உணவுகள் !

2 minute read
இன்றைய பெரும் பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை களுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு. நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
ஞாபக மறதி
தக்காளி, காரட், திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. 

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர் களையும், காரட் சாப்பிடாதவ ர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர் களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.


இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. 

இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயி லிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை.

நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக் கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகிய வற்றை உபயோகிக்கலாம்.
சைவ உணவுக் கரர்கள்
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. 

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக் கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டு படுத்தி விடும். 


மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்ப துடன் நல்ல மனப்பாங்கை யும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன.

மனதை அமைதிப் படுத்தி, தன்னம் பிக்கையை உணர்த்துவது வெள்ளைப் பூண்டு.
வெள்ளைப் பூண்டு
மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய் விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள்.

இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.

ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது 


என்பதை மட்டும் உறுதியாகக் கண்டு பிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப் படுகின்றன.
வைட்டமின்கள் குறையும்
இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்து விடும். 

மூளையும் அற்புதமாக இயங்கும். ஞாபக சக்தி பெருக கண்ட.. கண்ட டானிக்குகளை தவிர்த்து. இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்க.
Tags:
Today | 8, April 2025
Privacy and cookie settings