ஜம்முவில் சுரங்க பாதைகள்... 6 மாதத்தில் 4 சுரங்கங்கள் கண்டுபிடிப்பு !

1 minute read
0

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் சுரங்க பாதைகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா நகரில் பன்சார் என்ற இடத்தில் அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட சுரங்க பாதை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். 

கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இதே பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

உறுப்பு தானம் - எவ்வளவு மணி நேரத்துக்குள் பொருத்த வேண்டும்?

அந்த ஹெலிகாப்டரில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது. கடந்த 2019ம் ஆண்டு இந்த பகுதி வழியே கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. 

எல்லை பாதுகாப்பு படையினரால் துப்பாக்கி சூடு நடத்தி அந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

6 மாதத்தில் 4 சுரங்கங்கள் கண்டுபிடிப்பு

இந்த சுரங்க பாதையானது சம்பா, ஹிராநகர் மற்றும் கத்துவா பகுதியில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 4வது சுரங்க பாதையாகும். 
மனைவி சொத்தை கணவன் விற்கலாமா?

இதே போன்று ஜம்மு நகரில் மொத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10வது சுரங்க பாதை ஆகும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings