அடுத்த 4 நாட்கள் வங்கிகள் இயங்காது... ஊதிய உயர்வு !

1 minute read
0

வேலை நிறுத்தம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்பதால் மக்கள் தங்கள் வேலைகளை இன்றே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் படுகின்றனர்.

அடுத்த 4 நாட்கள் வங்கிகள் இயங்காது... ஊதிய உயர்வு !
பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, வருகிற மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. 

மேலும் மார்ச் 13 இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 14 ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் அந்த இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. 

முன்னதாக வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தி சென்ற மாதத்திலும் இரண்டு நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊதிய உயர்வு குறித்து தலைமைத் தொழிலாளர் ஆணையத்திடம் வங்கி ஊழியர்கள் யூனியன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், 

ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது தனியார் மயமாக்கலைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 4 நாட்கள் வங்கிகள் இயங்காது... ஊதிய உயர்வு !

இந்தப் போராட்டத்தில் 13 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். வங்கிகளைத் தனியார் மயமாக்கும் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த 

இந்த போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அகில இந்திய அளவில் அனைத்து வங்கிகளும் மூடப்படும் எனவும் 

அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். 

இந்தத் தொடர் விடுமுறையால் வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 24, March 2025
Privacy and cookie settings