பெற்றோரை மீறி காதலனை திருமணம் செய்த பெண் தற்கொலை !

0

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண், திருமணத்திற்கு பின் காதல் கணவரின் செயலைக் கண்டு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

பெற்றோரை மீறி காதலனை திருமணம் செய்த பெண் தற்கொலை !

பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா. இந்த இளம்பெண் சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். 

உலக நாடுகள் மொத்தத்தையும் அசைத்து பார்த்த புகைப்படம் !

அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்த யுவராஜ் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காதலாக மாறி இருக்கிறது.

இருவரின் காதல் விவகாரம் மேகலாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், யுவராஜை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். 

இதை தெரிந்து கொண்ட மேகலா கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறி வடபழனி கோவிலில் யுவராஜை திருமணம் செய்திருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் தான் யுவராஜ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் தினமும் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. 

இந்த பிரச்சனை அதிகமாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மேகலாவை அடித்திருக்கிறார் யுவராஜ். இதனால் ஆத்திரமடைந்த மேகலா தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். 

மைக்ரோ வேவ் அவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

அங்கு சென்றதும் அவர் கணவரின் செயலால் கடும் மன உளைச்சலில் இருப்பது எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது. தூங்கச் செல்வதாக சொல்லி விட்டு படுக்கை அறைக்கு சென்றிருக்கிறார் மேகலா. 

பெற்றோரை மீறி காதலனை திருமணம் செய்த பெண் தற்கொலை !

வெகு நேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து இருக்கிறார்கள். அங்கே மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியிருக்கிறார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings