இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

0

இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ரயில்வே துறை உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்பு கொண்டது. இன்று 170 ஆண்டு பாரம்பரியம் கொண்ட உலகின் மிகப்பெரிய அமைப்பாக விளங்குகிறது. 

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?
இன்று இந்திய மக்களின் போக்குவரத்தில் இன்றியமையாத சாதனமாகவும், மலிவான கட்டணம் கொண்ட போக்குவரத்து சேவையையும் ரயில்வே துறை வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், ரயில் பிரயாணம் எப்படி இனிமையானதோ, அதே அளவு ரயில்வே துறையின் பாரம்பரியத்திலும் பல சுவாரஸ்யங்கள், சாதனைகள் உள்ளன.

பொதுவாக வெளிநாடு செல்வதற்கு விமானம் மூலம் தான் செல்ல வேண்டும். ஆனால், ரயில் மூலமும் செல்லலாம் என்று உங்களுக்குத் தெரியுமா ?

ஹல்டிபாரி : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

ஹல்திபாரி சர்வதேச இரயில் நிலையம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி நகரத்திற்கு சேவை செய்கிறது. 

இது பங்களாதேஷ் - இந்திய எல்லையில் ஒரு செயலில் உள்ள இரயில் போக்குவரத்துப் புள்ளியாகும். 

ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம்

நியூ ஜல்பைகுரி - டாக்கா கன்டோன்மென்ட் - புதிய ஜல்பைகுரி மிதாலி எக்ஸ்பிரஸ் போன்ற முக்கியமான ரயில்கள் ஹல்திபாரி மற்றும் கொல்கத்தா - ஹல்திபாரி - கொல்கத்தா ட்ரை - வாராந்திர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 

சீல்டா - ஹல்திபாரி - சீல்டா டார்ஜிலிங் அஞ்சல் வழியாக இயக்கப் படுகிறது. புதிய ஜல்பைகுரி நிலையத்தின் மற்றொரு நிலையமாக இந்த ரயில் நிலையம் செயல்படுகிறது. 

இங்கிருந்து வங்கதேசத்திற்கு வெறும் 4.5 கி.மீ தூரம் தான். இங்கிருந்து எளிதாக வங்கதேசத்திற்குச் செல்லலாம்.

ஜெய்நகர் ரயில் நிலையம் : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

ஜெய்நகர் ரயில் நிலையம் (Jaynagar station) பீகார் மாநிலம் மதுபானியில் அமைந்துள்ளது. இங்கிருந்து நேபாளத்திற்கு ரயில் செல்கிறது. 

இப்பகுதி மக்கள் அதிகளவில் நேபால் செல்ல இந்த ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரயிலைத் தான் பயன்படுத்து கின்றனர்.

ஸ்கூல் கிளாஸ் ரூமில் டீச்சரும், வாத்தியாரும் !

பெட்ராபோல் : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

பெட்ராபோல் (Petrapole) ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு எளிதாகச் செல்லலாம். 

இந்த ரயில் நிலையம் முதன்மையாக இரண்டு நாடுகளுக்கு இடையே சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப் படுகிறது.

சிங்காபாத் : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

சிங்காபாத் ரயில் நிலையம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தின் மால்டா சதார் உட்பிரிவில் உள்ள ஹபீப்பூர் சமூக மேம்பாட்டுத் தொகுதியில் சிங்காபாத்தில் சேவை செய்கிறது. 

இது பங்களாதேஷ் - இந்திய எல்லையில் உள்ள ஒரு ரயில் போக்குவரத்துப் புள்ளியாகும். இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரோகன்பூர் வழியாக ரயில் செல்கிறது.

கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பாதுகாப்பு டிப்ஸ் !

ஜோக்பானி : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

ஜோக்பானி ரயில் நிலையம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் ஜோக்பானிக்கு சேவை செய்கிறது .

இங்கிருந்து நேபாளத்துக்கு ரயில் செல்கிறது. மேலும் ரயில் மூலம் மட்டும் அல்ல இங்கிருந்து நடந்தே கூட நேபாளத்துக்கு செல்லலாம்.

ராதிகாபூர் : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

ராதிகாபூர் ரயில் நிலையம் என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராதிகாபூருக்கு சேவை செய்யும் நிலையமாகும். 

இது பங்களாதேஷ் - இந்திய எல்லையில் செயல்படும் இரயில் போக்குவரத்து அமைப்பாகும். இது சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது. 

இந்த ரயில் நிலையம் ஜீரோ பாயின்ட் ரயில் நிலையம் என்றும் அழைக்கப் படுகிறது. இது மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் செல்கின்றன.

கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !

அட்டாரி ரயில் நிலையம் : .

இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வெளிநாடு செல்லும் இடங்கள்... தெரியுமா?

அட்டாரி ஷியாம் சிங் ரயில் நிலையம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் அட்டாரி மற்றும் பாகிஸ்தானுடனான வாகா எல்லையில் சேவை செய்கிறது.

மே 2015 இல், பஞ்சாப் அரசு சீக்கிய சாம்ராஜ்யத்தில் ஜெனரலாக இருந்த ஷாம் சிங் அடாரிவாலாவின் நினைவாக நிலையத்தின் பெயரை அட்டாரி ஷாம் சிங் ரயில் நிலையம் என்று மாற்றியது .

ஆட்டோ ரன்னிங்கில் சக்கரத்தை மாற்றிய இளைஞர்கள் !

வடக்கு ரயில்வேயில் கீழ் இந்த நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் பாகிஸ்தானுக்குச் செல்கிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த ரயில் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings