அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !

3 minute read
0

ஆந்திராவில் ஒரு நபர் தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணையும் அவரது கைக் குழந்தையையும் ஆற்றிவில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ஆற்றில் வீசிய ஒரு சிறுமி, குழாய் ஒன்றைப் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்துள்ளார். 

அம்மா, தங்கையை ஆற்றில் தள்ளினார்... குழந்தைக்கு நடந்த கொடூரம் !
அம்மாவும் அந்த மாமாவும் காரில் இருந்து இறங்கினார்கள். மாமா செல்ஃபி எடுப்பதாகச் சொல்லி அம்மாவை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து அம்மாவை ஆற்றில் தள்ளி விட்டார். 

அக்காவையும் என்னிடமிருந்து பறித்து ஆற்றில் வீசினார். நான் பயந்து ஓடினேன். அவர் என்னையும் பிடித்து ஆற்றில் தள்ளினார். ஆனால் பாலத்தில் இருந்த ஒரு குழாயைப் பிடித்துக் கொண்டேன். 

அதனால் தான் உயிர் பிழைத்தேன், என்று தனக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார் கீர்த்தனா. இந்த 13 வயது சிறுமியின் கூற்றுப்படி, தனது தாய் நம்பிய நபரே இந்த கொடூரத்தைச் செய்துள்ளார். 

எந்த நாட்டிற்கு செல்லவும் இங்கிலாந்து ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை தெரியுமா?

ஆந்திராவின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ஜொன்னடா - ரவுலபாலம் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுஹாசினி என்ற பெண்ணை, அவருடன் வாழ்ந்து வந்தவரே கோதாவரி ஆற்றில் தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபர் சுஹாசினியின் இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் தள்ளினார். ஆனால், உயிர் பிழைத்த கீர்த்தனா என்ற குழந்தை தற்போது தெனாலி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 17, April 2025
Privacy and cookie settings