நெல்லையில் கொழுந்தியாளை தூக்கியதால் வீடு போன மாப்பிள்ளை.. போலீஸ் !

0

கொழுந்தியாள் மீது நீண்ட நாட்களாகவே ஒரு கண் இருந்துள்ளது. அத்துமீறிய மாப்பிள்ளை, இப்போது 'மாமியார்' வீட்டுக்கு போயுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் ஒரு சம்பவம் நடந்தது. 

நெல்லையில் கொழுந்தியாளை தூக்கியதால் வீடு போன மாப்பிள்ளை..  போலீஸ் !
இங்குள்ள தம்பதி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர். பிறகு, ஒரு நாள், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்கு தன்னுடைய கணவரை அழைத்து வந்தார் மனைவி.

அப்போது தான், மனைவியின் தங்கை மீது, கணவருக்கு தவறான பார்வை விழுந்தது. இந்த தங்கை ஒரு மருத்துவ மனையில் வேலை பார்த்து வந்தார். 

தினமும் அவரை மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்து போயுள்ளார். நாளடைவில் இந்த பெண்ணையே திருமணமும் செய்ய ஆசைப்பட்டார். 

நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும் அறிந்து கொள்ள !
இதற்காக ஆசை பட பாணியில், மனைவியையும் கொன்று விட்டார். மாரடைப்பில் மனைவி இறந்து விட்டதாகவும், தூக்கத்திலேயே உயிர் போய் விட்டதாகவும் சொல்லி எல்லாரையும் நம்ப வைத்தார். 

கதறி கதறி அழுதவரை பார்த்து, மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்தது. பிறகு, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. 

அதில், கழுத்திலிருக்கும் மூச்சுக்குழாய் உடைந்து, அதனாலேயே மனைவி இறந்து விட்டதாக கூறப்பட்டது. இதற்கு பிறகு தான், குடும்பத்தினர் போலீசுக்கு ஓடிச்சென்று, மரணத்தில் சந்தேகம் என்று சொன்னார்கள்.

கணவரை பிடித்து விசாரித்ததில், கொழுந்தியாள் மீதுள்ள மோகத்தினால், மனைவியின் கழுத்தை கயிறால் இறுக்கி கொன்று விட்டதாக வாக்குமூலம் தந்தார்.. பிறகு மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவ அதிர்ச்சியே முடியாத நிலையில், இதோ இன்னொரு கொழுந்தியாள் பலிகடாவாகி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நடுவக்குறிச்சி தெற்கு ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருக்கு 55 வயதாகிறது. 9 மகள்கள் இருக்கிறார்கள். 

இதில் 7 பேருக்கு கல்யாணமாகி விட்டது. இன்னும் 2 பேருக்கு திருமணமாக வில்லை. 9 மகள்களில் மூத்த பெண், திசையன் விளையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். 

இந்த வீட்டுக்கு, கிரகப்பிரவேசம் நடத்த முடிவு செய்து, குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள் என ஊரையே அழைத்துள்ளார். 

அந்த வகையில், மகளின் புதுமனை புகுவிழாவுக்கு செந்தில்வேல், திருமணமாகாத தன்னுடைய 2 மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.

விருந்து: இல்லத்திருவிழா தடபுடலாக நடந்து முடிந்தது. மதியம் அனைவருமே விருந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததுமே, தன்னுடைய ஊருக்கு கிளம்ப தயாரானார் செந்தில்வேல். 

அப்போது தான், தன்னுடன் வந்த 17 வயதான 9வது மகளை காணவில்லை என்பதை அறிந்தார். இதனால் பதறிப் போன செந்தில்வேல், அக்கம்பக்கம் வீடுகளுக்கு சென்று தேடினார்.

கொசுதானே என்ன ஆகிவிடும் என்று அலட்சியப் படுத்த வேண்டாம் !

புது இடத்தில் எங்காவது வழி தெரியாமல் தொலைந்து போயிருப்பாரோ? என்று பயந்து கொண்டு, திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தன்னுடைய கடைசி மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் தந்தார். 

இதையடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடினர். அப்போது தான், சொந்த வீட்டிலேயே நடந்த அக்கிரமம் தெரிய வந்தது. செந்தில்வேலின் மருமகனே, இப்படி ஒரு காரியத்தை செய்தது தெரிய வந்தது.

4வது மகளின் கணவர் பெயர் ஜெயசீலன். விழாவில் எல்லாரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டு பிஸியாக இருந்தால், யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து, கொழுந்தியாளை ஆசைவார்த்தை சொல்லி பக்கத்து ஊருக்கு கடத்தி சென்றுள்ளார். 

பாலியல் வன்மத்தையும் ஜெயசீலன் அரங்கேற்றி யிருக்கிறார் என்பது உறுதியானது. கொழுந்தியாளை கடத்தி சென்று பாலியல் அக்கிரமத்தை செய்த 4வது மருமகன், இப்போது மாமியார் வீட்டில் உள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings