விசித்ரா ஒரு க்ளாமர் நடிகை என்று அவர் கணவருக்கு தெரியாதாம் !

0

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் க்ளாமர் குயினாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. பல திரைப்படங்களில் ஐட்டம் நடனத்தில் மட்டும் நடிப்பார் .ஒரு சில படங்களில் செந்தில், கவுண்டமணி, வடிவேலு இவர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

விசித்ரா ஒரு க்ளாமர் நடிகை என்று அவர் கணவருக்கு தெரியாதாம் !
முத்து படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக தனது நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் மக்களை மிகவும் கவர்ந்தார். இவரின் நடனம் காண்போரை சுண்டி இழுக்கும் அளவுக்கு தனது கவர்ச்சியால் விருந்து படைத்தார்.

இந்த நிலையில் விசித்ரா தனது காதல் கணவரான சாயிஷாவை ஒரு ஹோட்டலில் தான் முதன் முதலில் பார்த்திருக்கிறார். 

அந்த ஹோட்டலில் மேனேஜராக இருந்த சாயிஷா மீது ஆரம்பத்தில் இருந்தே விசித்ராவுக்கு மோதல் தான் இருந்ததாம். அதன் பின் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணமும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அது வரைக்கும் விசித்ரா ஒரு க்ளாமர் நடிகை என்றே அவரது கணவருக்கு தெரியாதாம். திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வந்ததாம். ஆனாலும் அதை பற்றி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லையாம். 

(getCard) #type=(post) #title=(You might Like)

ஆனால் சில வரைமுறைகளை வகுத்தாராம். திருமணம் முடிந்த புதிதில் வெளியே செல்லும் போது காருக்குள் விசித்ராவும் அவரது கணவரும் உட்கார்ந்திருந் தார்களாம். 

விசித்ராவை பார்த்ததும் ரசிகர் ஒருவர் ஓடி வந்து விசித்ராவின் கையை பிடித்து குலுக்க ஆரம்பித்தாராம்.

இதை பார்த்ததும் அவரது கணவருக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். ஏன் இப்படி யெல்லாம் நடந்துக்கிறார்கள்? இப்படியா இருப்பார்கள்? என கொஞ்சம் எரிச்சல் அடைந்தாராம். 

அது மட்டுமில்லாமல் இரவு நேரங்களில் விசித்ராவின் தொலைபேசிக்கு அழைப்புகள் வருமாம். இதை யெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சினிமா தொடர்பான பிரபலங்களில் தொடர்புகளை துண்டித்துக் கொண்டாராம் விசித்ரா.

இனிமே சினிமாவிற்கு குட்பை சொல்லி விட்டேன் என்றும் அவரது கணவரிடம் தெரிவித்தாராம். அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என விசித்ரா அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings