உடல் பசி 50 வயதிலும் இருக்குமா? அதற்கு என்ன பதில் !

1 minute read
0

மனிதனுக்கு எத்தனையோ வழிகளில் ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவு, உயர்ந்த நட்பு, சிறந்த கேளிக்கை, விளையாட்டு போன்ற பல்வேறு வழிகளில் ஆனந்தம் அடையும் போது ஏற்படாத குற்ற உணர்வு, காமத்தால் கிடைக்கும் ஆனந்தத்தில் உருவாகிறது. 

உடல் பசி 50 வயதிலும் இருக்குமா? அத்ற்கு என்ன பதில் !
செய்யக் கூடாத ஒரு தவறு செய்து விட்டது போல் உணர்கிறான். இது சரிதானா..? மலர்களை ரசித்துக் கொண்டிருந்த ஞானகுருவிடம் ஒரு பெண் தயங்கித் தயங்கி தன் சந்தேகம் கேட்டாள்.

50 வயதிலும் என் உடல் காமத்தை எதிர்பார்க்கிறது... என்னால் இதைத் தவிர்க்க இயலவில்லை. ஆனால், இது பற்றி பேசுவதற்கு அவமானமாக இருக்கிறது என்று தலை குனிந்து நின்றாள்.

அவள் முகத்தைப் பார்த்து பேசினார் ஞானகுரு. 80 வயதானாலும் வயிறு பசிப்பது போன்று உடலும் பசிப்பது தவறு இல்லை. 

உலகில் மனிதன் மட்டுமே குழந்தை பெறுவதைத் தாண்டியும் காமத்தை ஆனந்தத்துக்குப் பயன்படுத்துகிறான். சந்தோஷம், ஆனந்தம் தரும் எதுவும் தவறு இல்லை.

அதே நேரம், ஆணும் பெண்ணும் பிறர் துணையின்றியும் காமத்தை வெல்ல முடியும் என்பதைப் புரிந்துகொள். நிறைவேறாத ஆசை பெருங்கோபமாக மாறிவிடும். 

வாழ்க்கை என்பது குடும்பம், பணம், ஆரோக்கியம், கேளிக்கை, அன்பு போன்ற பல்வேறு கூறுகள் கொண்ட முழுமையான ஒரு சக்கரம். இதில் காமத்துக்கும் ஓர் இடம் நிச்சயம் உண்டு. 

மலர்களை ரசிப்பது போன்று காமத்தையும் அனுபவித்து நகர்ந்துவிடு. இதில் அச்சப்படவோ, மகிழவோ எதுவும் இல்லை. உன் காமத்துக்குப் பிறரை இரையாக்கவோ, பிறரது காமத்துக்கு நீ இரையாகவோ மாறி விடாதே. 

பரஸ்பரம் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறு… என்று சொல்லிவிட்டு மலர்களை ரசிக்கத் தொடங்கினார் ஞானகுரு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings