பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?

0

பொதுவாக குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் கண்டுப்பிடித்து விடுவார்கள். அதே போல், நெருக்கமான நண்பர்கள் பொய் சொன்னாலும் கண்டுப்பிடித்து விடலாம்.

பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?
ஆனால் சில நேரங்களில் பொய் கூறுவதற்கு ஒரு அறிகுறிகூட இல்லாமல் சிலர் பொய் சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் எதாவது ஒருவழியில் மாட்டிக் கொள்வார்கள். 

அதே போல் நாமும் அவர்களை கூர்ந்து கவனித்து அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் எப்படிப் பொய் கூறுபவர்களை கண்டுபிடிப்பது என்பதைப் பார்ப்போம்.

கொளுத்தவனுக்கு கொள்ளு...இளைத்தவனுக்கு எள்ளு எப்படி?

பேசுவதைக் கவனியுங்கள்:

ஒருவர் பேசும்போது உண்மை பேசுகிறாரா? பொய் பேசுகிறாரா? என்பதை அவர்கள் பேசும் தோரணை யிலிருந்தே கண்டுப்பிடித்து விடலாம். 

உதாரணத்திற்குப் பொய் பேசும் போது வராத இருமலை அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்காக அடிக்கடி செயற்கையாக வரவைத்துக் கொண்டு பேசுவார்கள். 

திடீரென்று சம்மதம் இல்லாத விஷயத்தையோ இல்லை ஒரு சாதாரண விஷயத்தையோ தன்னையறியாமல் சத்தம் போட்டு சொல்வர்கள். மிக வேக வேகமாகக் உரையாடலை முடிக்கப் பார்ப்பார்கள். 

ஏனெனில் பொய் சொல்பவர்கள் எப்போது அந்த சூழ்நிலை யிலிருந்து தப்பிக்கலாம் என்றே வழி தேடிக்கொண்டி ருப்பார்கள்.

முகபாவங்களைக் கவனியுங்கள்:

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆம்! ஒருவர் பேசும் போது அவர் முகபாவங்களும் சேர்ந்து பேசுமாம். வார்த்தைகளை விட முகபாவம் உண்மையை மட்டுமே பேசும் தன்மையுடையது. 

ஒருவர் பேசும் போது இயல்பை விட அதிகமாகத் தலையை ஆட்டி ஆட்டி பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் எதையோ மறைக்கிறார் என்று உறுதி செய்து விடலாம்.

பொதுவாகப் பொய் சொல்லும் போது மூளை பேச்சிற்கு மட்டுமே ஒத்துழைக்குமே தவிர முகபாவத்திற்குச் சிறிதும் ஒத்துப் போகாது. அதனால் முகபாவத்தை உண்மை பேசுவது போல் வைத்துக் கொள்ளத் தூண்டும். 

இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !

ஆனால் அதுவே அப்பட்டமாகக் காண்பித்துக் கொடுத்து விடும் இவர் நடிக்க முயற்சிக்கிறார் என்று. எப்போதும் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை பார்த்துத் தான் பேச வேண்டும். 

ஒருவர் உங்கள் கண்களைப் பார்க்க முயன்றும் பேசும் போது சரியாகப் பார்க்க முடியவில்லை என்றால் அவர் ஏதோ உண்மையை மறைக்கிறார் என்று கண்டுப்பிடித்து விடலாம்.

உடல் தோரணையைக் கவனியுங்கள்:

பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?

ஒருவர் வழக்கத்திற்கு மாறாகப் பேசும் போது பேச்சுக்கு இடையிடையே கழுத்தைப் பின்பக்கம் பிடிப்பது, கைகளை இடையிடையே தேய்ப்பது, வாயை மூடிக்கொள்வது, மூக்கின் மேல் விரல் வைப்பது போன்ற தேவையற்ற ஜாடைகள் செய்வார்கள். 

அப்போது எளிதாக நீங்கள் கண்டுப்பிடித்து விடலாம் அவர்கள் எதோ பொய் சொல்கிறார்கள் என்று. உங்களிடம் யாராவது பொய் சொல்கிறார் என்றால் இந்த மூன்று முறைகள் வைத்து நீங்கள் கண்டுப்பிடித்து விடலாம். 

அப்படி ஒருவர் பொய் சொல்கிறார் என்றால் நீங்களாகவே அவர் பேசுவதற்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள். உதாரணத்திற்கு, பரவாயில்லை எதையும் மறைக்க வேண்டாம். 

இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா?

உண்மையைச் சொல்லுங்கள். எதுவாயினும் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இது உங்களிடம் பேசுபவர்களைப் பொய் கூறாமல் தடுப்பதற்கு உதவும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings