பாலை நிலத்து மனிதர்கள் ஆண்ட பரம்பரையா?

0

பாலைவனத்தில் உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழலில் அங்கு வாழ்வது ஒரு வாழ்வியல் பாடம் தான்.பாலை நிலத்தில் வாழ முதல் அடிப்படை தன்மை சுயநலம் கொண்ட பண்பு.

பாலை நிலத்து மனிதர்கள் ஆண்ட பரம்பரையா?
பாலை நிலத்தில் தான் ஆண்டைகள் உருவாகினர், மருத நிலத்தில் அடிமைகள் உருவாகினர். உலகில் பெரிய பாலைவனம் சஹாரா தான். ஆனால் அங்கு தான் எகிப்திய நாகரீகம் தோன்றியது. 

எகிப்தியர்கள் கலைகளில், அறிவியல் ஒப்பற்ற அறிவைக் கொண்டிருந்தனர். அவர்கள் அண்டை நாட்டினர் மீது படையெடுத்ததே அபூர்வம். செல்வ வளம் கொழிக்கும் நாடு எகிப்து. 

தங்கம் என்பதே அவர்களுக்கு பாலை மணல் போன்றது. அவர்களின் கலை பொக்கிஷங்கள், தங்க குவியல்கள் அள்ள அள்ள குறையாது. அவர்களின் கட்டிடக்கலைகள் இன்றைக்கும் சவாலானாது.

அடுத்த பாலைவனம் எகிப்தின் அருகில் உள்ள அரேபியா தீபகற்கம். மிகப்பெரிய பாலைவனங்கள் மட்டுமே கொண்ட பூமி, பேரிட்சை தவிர விளைய ஏதுமில்லை. 

இயர் போனால் வரும் இன்னல்கள் !

அரேபியாவில் மோசமான வறுமை நிலவியது. பெட்ரோலியம் கண்டறியும் வரை அது வறுமையின் தேசம் மட்டுமே. இந்தியாவின் ஹைதராபாத் நிஜாம் அரபியாவுக்கு ஏராளமான கொடைகள் அளித்துள்ளார். 

அரேபியர்கள் அண்டை நாட்டின் மீது கொள்ளையிட்டு வாழ்ந்தனர். பாலை நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. உணவுக்கு ஒரே வழி பாலை நில விலஙகுகள் ஒட்டகம் அல்லது ஆட்டை வெட்டி தான் உண்ண வேண்டும்.

அது பத்தாதே குபூஸ்க்கு மாவு வேண்டுமே? படையெடுப்பில் அண்டை நாடுகளின் தானியங்கள் சூறையாடப்படும்.

அடுத்ததாக வறண்ட பர்சியா. உலகிலேயே அதிக காலம் அதிக நிலப்பரப்பை ஆண்ட ஆண்டைகள் இவர்களே ஒருபுறம் ஆப்கனிலிருந்து ஐரோப்பாவின் பலதேசங்கள் வரை, மறுபுறம் கானான் வரை அவர்களின் ஆளுகை தான். 

ஐரோப்பியாவில் உணவையும், அரேபியா, கானான் நாடுகளில் மக்களையும் அடிமைகளாக கவர்ந்து சென்றனர்.

ராஜஸ்தான் பாலைவனம் தான் உலகில் அதிகளவு ஆண்டைகளை உற்பத்தி செய்த தேசம். அரச பூமி. மாநிலத்தில் ஊருக்கு ஊர் அரசர்கள். அனைவரும் ஆண்டைகள். 

பாலை நிலத்து மனிதர்கள் ஆண்ட பரம்பரையா?

ஒரு அரசர் மற்ற அரசரின் கஜானாக்களை கொள்ளையடிப்பதும் சூறையாடுவதும் சகஜம். ராஜஸ்தான் அரசர்கள் தங்கள் தகுதிக்கு இங்கிலாந்து ராஜாவுடன் கை குலுக்குவதை கேவலமாக கருதினர். 

கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொண்டு தவிர்ப்பார்கள். இங்கிலாந்து அதிகாரிகள் வரும் போது தான் கழிவறைக்கு போய் வந்தேன் என்று ஈரக் கைகளை அவர்கள் முன் துடைப்பார்கள். 

அவ்வளவு கீழாக வெள்ளைக்காரர்களை நினைத்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள கோட்டைகளின் மதிப்பு இங்கிலாந்தை விற்க வேண்டும்.

தமிழ் நாட்டுக்கு வந்தாச்சு. இங்கு ஏது பாலை நிலம் ? மாதம் மும்முறை பொழிவதாக அல்லவா குறிப்புகள் உண்டு. சேதுபூமி, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற நாடுகள் கோடைக்காலத்தில் பாலைவனம் போன்று இருக்கும். 

காதருகே இந்த சிறிய ஓட்டை ஏன்?

எயினர் ,மறவர் பாலை நில மக்கள். குறிஞ்சியும் முல்லையும் பாலையாக திரியும் போது மக்களில் ஆணும் பெண்ணும் பிரிகின்றனர். ஆண்கள் பொருள் ஈட்ட வெளியே செல்கின்றனர்.

ஆரலைக் கள்வர்கள் பொருட்களை சூறையாடுகின்றனர். பாலை நிலத்தில் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் போது மக்கள் சூறையாடுகிறார்கள். பாலை மீண்டும் குறிஞ்சியும் முல்லையாக மாறும் போது ஆடு மாடு மேய்க்கின்றனர். 

தேன் எடுக்கின்றனர். தினை அறுக்கின்றனர். கிழங்கு அகழ்வு செய்கின்றனர். குறிஞ்சி முல்லை திணை மக்கள் ஆயர்களும் வேடர்களும் அது பாலையாகும் போது எயினர்களும் மறவர்களுமாக மக்கள் மாறுகின்றனர்.

பாலை திணையில் மக்கள் வலிமையானவர்கள். தலைமை பண்பு கொண்டவர்கள் சூறையாடுதலில் கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்தனர். இதில் அடிமைகளுக்கும் பங்கு உண்டு. 

பாலை நிலத்து மனிதர்கள் ஆண்ட பரம்பரையா?

ஆடு திருடினால் தோலும் காலும், வாலும், குடலும், தலையும் அடிமைகளுக்கு. கறி துணிந்தவனுக்கு. தோலை உறிப்பவனும் கூறு போடவும் அடிமைகள் இருக்கிறார்கள். அனைத்தும் கொடுப்பவன் தலைவன் ஆகிறான் குடி மக்கள் அவனுக்கு விசுவாசிகள் ஆயினர். 

உலகெங்கிலும் பேரரசுகள் பாலைத்திணையில் உருவாகியது தான். எயினர்களாகிய கள்ளரும் மறவர்களும் ஆண்ட பரம்பரை ஆயினர். 

காபி பொடில யானை சாணம்? தெரியுமா உங்களுக்கு !

அவர்கள் மட்டுமல்ல ராஜ்புத், ஜாட் போன்ற உயர்குடிகளும் பாலையில் தோன்றியவையே. உலகின் பெரும் கொள்ளைக் கூட்டம் இங்கிலாந்து அரச குடும்பம் தான் ஆனாலும் ராயல் பேமிலி தானே. 

அரச குடி மட்டுமா ? மோசஸ், ஜீசஸ் எல்லாம் பாலையில் தோன்றியவர்கள் தானே. ஆண்ட பரம்பரை மட்டுமல்ல, ஆண்டவனும் ஆனார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings