கதிகலங்கிய கோவை. யாரிந்த லாவண்யா? என்ன நடந்தது?

0

கோவை வடவள்ளி அருகே உள்ளது சோமையம் பாளையம். இங்கிருக்கும் காளப்ப நாயக்கன் பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு. 40 வயதாகிறது. இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி. மனைவி பெயர் லாவண்யா. 

கதிகலங்கிய கோவை. யாரிந்த லாவண்யா? என்ன நடந்தது?
33 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். லாவண்யாவும், அவரது மாமியார் கலாவதியும் சேர்ந்து தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார்கள். 

இந்நிலையில், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபு, சமீப நாட்களாகவே வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

நேற்று முன்தினம் டிபன் கடையிலிருந்து லாவண்யா வீட்டிற்கு வந்த போது, பிரபு மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து பதறிப்போய், மாமியாருக்கு தகவல் சொன்னார். 

மாமியாரும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பிரபுவின் கழுத்தில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதனால் உடனடியாக வடவள்ளி போலீசில் புகார் செய்தார். 

நண்பர்கள் செய்த துரோகத்தால் உடைந்து போன விஜயகாந்த்

போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையை நடத்திய போது தான், லாவண்யாவின் லீலைகள் அம்பலமாயின.

அதாவது லாவண்யா நடத்தி வரும் டிபன் கடைக்கு பக்கத்திலேயே ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா என்ற 40 வயது நபர் வேலை பார்த்து வருகிறார். 

கவுடா அடிக்கடி லாவண்யா கடைக்கு வந்து டிபன் சாப்பிட்டு விட்டு செல்வாராம். அப்போது தான் லாவண்யாவுக்கும், கவுடாவுக்கும் கள்ளக்காதல் ஆரம்பமாகி யிருக்கிறது. 

இவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் பிரபுக்கு தெரிந்ததுமே கொந்தளித்துள்ளார்.

இனிமேல் டிபன் கடைக்கு செல்ல வேண்டாம் என்றும், தன்னுடைய அம்மா மட்டும் கடையை கவனித்து கொள்ளட்டும் என்றும் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். 

இதனால் வீட்டிலேயே அடைபட்ட லாவண்யா, கவுடாவை பார்க்காமல் தவித்து வந்துள்ளார். இறுதியில் கணவனை கொலை செய்யவும் முடிவு செய்தார். சில நாட்களுக்கு முன்பு, பிரபுவுக்கு, விஷம் கலந்த உணவை தந்துள்ளார். 

அந்த உணவை சாப்பிட்ட பிரபுவுக்கு உடல்நிலை மோசமாகி யிருக்கிறது. இதனையடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு தீவிர சிகிச்சையும் நடந்தது. இதில் பிரபு உயிர் பிழைத்து விட்டார். 

இதற்கு பிறகுதான் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். விஷம் வைத்தும் கணவன் சாகவில்லையே என்று கவலைப்பட்ட லாவண்யா, மறுபடியும் கொலை செய்ய முடிவு செய்தார்.

சம்பவத்தன்று டிபன் கடைக்கு சென்று மாமியாருக்கு உதவி செய்தார் லாவண்யா. பிறகு வீட்டிற்கு சென்று கணவரை கவனிப்பது போல் நாடகமாடி விட்டு, கள்ளக்காதலனை அழைத்துள்ளார்.

அப்போதுதான், மாத்திரை, மருந்து சாப்பிட்ட பிரபு சோர்வாக படுத்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்த கவுடா படுத்திருந்த பிரபுவின் கழுத்தை, டவலால் இறுக்கினார். 

இதில் அதிர்ச்சியடைந்த பிரபு கை, கால்களை உதைத்து சத்தம் போட்டார். உடனே லாவண்யா கணவரின் முகத்தை தலையணையால் அமுக்கினார். சிறிது நேரத்திற்கெல்லாம் துடிதுடித்தே இறந்து போனார் பிரபு. 

இதில், பிரபுவின் உயிர் பிரியும் வரை, தலையணையால் முகத்தை அமுக்கி கொண்டே யிருந்தாராம் லாவண்யா.

இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, கள்ளஜோடியை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings